ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோயில் ரத வீதியில் வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

Mar 22 2025

பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து, இன்று கடுமையான வெப்ப சலனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், கோயிலில் இருந்து வெளியேறி ரதவீதியில் நடந்து சென்றனர். ஆனால் வெயில் சுட்டெரித்ததால், காலணி இன்றி நடந்து சென்ற பக்தர்கள் ஓடோடி கடைகளில் முன்புள்ள பந்தல் நிழலை தேடி ஒதுங்கினர். மேலும் வயதான மூத்த பக்தர்கள், குழந்தைகள் வெப்ப சலனத்தில் பெரிதும் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க கோயில் தெற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதியில் தற்காலிக பந்தல் அமைக்க பக்தர்கள் கோரினர்.